Friday 16 September 2016

twitter பார்வையில்.....


தமிழிசைக்கும், மோடிக்கும் ஸ்லிப்பர் ஷாட்😂😂😂

Friday 26 August 2016

டிஜிட்டல் இந்தியா..? மேக் இன் இந்தியா...??

மனைவியின் சடலம் சுமந்த கணவனை தொடர்ந்து ஒடிஷாவில் இன்னொரு கொடூரம்.
�ஒரு மூதாட்டி ரயிலில் அடிபடுகிறார். அருகில் மகன் துடிக்கிறான். தாய் உயிர் போனதும் ரயில்வே போலீஸ் வருகிறது. போஸ்ட்மார்ட்டம் செய்ய அந்த ஊர் ஆஸ்பத்திரியில் வசதி இல்லை. அடுத்த ஊருக்கு போக வேண்டும். ஆம்புலன்ஸ் கேட்கிறது. கிடைக்கவில்லை. வாகனம் தேடுகிறது. கட்டணம் கட்டுபடி ஆகவில்லை.
�ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கிறது. இரு தொழிலாளிகளை அழைத்து, சடலத்தை ரயிலில் ஏற்ற சொல்கிறது.
�துணியில் கட்டி தூக்கிச் செல்ல சடலத்தின் நீளம் இடைஞ்சலாக இருக்கிறது. இரு தொழிலாளிகளில் ஒருத்தர் சடலத்தின் இடுப்பில் ஒரு காலால் மிதித்து அழுத்தி, அதன் கால்களை மடக்குகிறார்.
�சடலம் இரு துண்டுகளாக உடைகிறது. பொட்டலமாக கட்டி மூங்கிலில் பிணைத்து தூக்கி செல்கிறார்கள்.
�"அய்யோ அம்மா.. என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. மன்னித்து விடு அம்மா" என்று மகன் கதறுகிறான்.
�யார் காதில் விழப் போகிறது?
டிஜிட்டல் இந்தியா..?
மேக் இன் இந்தியா...??

தாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்...?

தாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்...?
தன்னை பெற்ற தாயை நினைத்து அழுவதா?
தந்தையின் நிலையை
நினைத்து கதறுவதா?
இந்த நாட்டிலா பிறந்தோம்
என வருந்துவதா?
இந்த மிருகங்களுடனா
வாழ்ந்தோம் என வருந்துவதா?
இறந்த தாயின் பூத உடலும்
தவிக்கும் தந்தையின்
இயலாமையும்
கலங்கி நிற்கும்
பச்சிளம் தளிரின்
பேதலிப்பும் காவிக்கூட்டத்தையும்
சாதி வெறியர்களையும்
மனித தன்மையற்ற மிருகங்களையும்
அழிக்காமல் விடாது
இந்த நாடும் நாட்டு மக்களும்
நாசமாகட்டும்
கலங்காத மனிதனும்
கண்ணிர் வடிக்கும்
கனத்த கல்நெஞ்சும்
கரையுதே
கருணை இல்லா தேசத்தில்
ஏன் பிறந்தேன் என
மனசு பதருதே
அய்யோ
பூகம்பம் வரட்டும்
பாவிகளின்
தேசம் அழியட்டும்


ஜனநாயக ஆட்சி ஜனங்களுக்கு இல்லையா?
ஒடிசா மாநில பழங்குடியை சேர்ந்த இறந்து போன பெண்ணுக்கு அரசு 'பிண ஊர்தி' ( Mortuary Van ) மறுக்கப்பட்டதால், தனது 12 வயது மகளுடன் இறந்துவிட்ட மனைவியின் பிணத்தை 12 கிலோமீட்டர் தனது தோளில் சுமந்து சென்று மாயனத்தில் இறுதி காரியம் செய்த ஒரு இந்திய#குடிமகனின் அவலக்காட்சிதான் இது.
மனித உரிமை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஆட்கள் எல்லாம் இப்போ எந்த பொந்தில் இருந்கின்றார்கள் என்று தெரியவில்லை ..
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு குரல் கொடுக்க மட்டும்தான் அரசா?
#ஜனநாயக ஆட்சி??? #ஜனங்களுக்கு இல்லையா???