Sunday 28 April 2013

தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற்கு

கூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம்.
நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ அல்லது வேறு எங்கோ நம் மின்னஞ்சல் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம்.
இப்படி இணையத்தில் நம்முடைய மின்னஞ்சல் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத மின்னஞ்சல்களையும், ஆபத்தான மின்னஞ்சல்களையும் நமக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam மின்னஞ்சல்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.
Follow Steps:
1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.
2. Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்.
3. Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும்.
4. அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு விடுங்கள்.
5. அடுத்து கீழே உள்ள Next Step என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ வரும் அதில் OK கொடுக்கவும்.
6. அடுத்து இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Delete it என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இடவும்.
7. அடுத்து கீழே உள்ள Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் Filter உருவாகிவிட்டது. இனி உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் Spam மின்னஞ்சல்கள் தானாக Delete ஆகிவிடும்.
Note: கூகுள் கொடுத்து இருக்கும் Unlimited Space சேவையில் இதை delete செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்பாம் போல்டருக்கு வரும் சில நல்ல மின்னஞ்சல்களும் அழிந்து விடும்

உங்களது ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்துகின்றாரா என்பதை தெரிந்து கொள்வதற்கு

நாம் வைத்திருக்கும் ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினாலோ அல்லது நமக்கு தெரியாமல் "BadActivity" நடந்திருந்தாலோ நமக்கு இதுவரை தெரியாமல் இருந்துவந்தது.
ஜிமெயில் தான் இப்பொழுது அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்குகள் பற்றிய விவரங்கள் பல Confidential Informations நமது கணக்கில் வைத்திருப்போம், இப்படி இருக்கும் போது கண்டிப்பாக நமது கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். நம் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினால் நாம் எப்படி தெரிந்து கொள்வது?
உங்கள் ஜிமெயில் கணக்கை திறந்து Inbox கீழே
Details என்பதை கிளிக் செய்யவும்.
Change என்பதை கிளிக் செய்யவும்.
வேலை முடிந்தது, அடுத்த தடவை யாராவது உங்க கணக்கை பயன்படுத்தினால் கீழே உள்ளது போல உங்க ஜிமெயில் கணக்கில் வரும்.
இப்படி உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினது தெரியவந்தால் உங்கள் Password மாற்றி விடுங்கள். உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.

ரேஷன் கார்டு-புதுப்பித்துக் கொள்ளும் வசதி

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2013 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்தந்த கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2013ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2013 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2013 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில் http://www.consumer.tn.gov.in/ என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2013’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்பட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி, கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.

நன்றி :

Friday 26 April 2013

அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா?

வணக்கம் நண்பர்களே..!

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்று எப்படி அறிந்துகொள்வது?
email tracker

அந்த வசதியை நமக்கு கொடுக்கிறது ஸ்பைபிக் என்ற தளம்.



நீங்கள் பயன்படுத்தும் E-Mail கிளையண்ட் எதுவாக இருந்தாலும் சரி.. அதாவது, Gmail, Yahoo mail, Rediffmail, Eudora, Gmail, Hotmail, AOL Email இப்படி எந்த ஒரு மின்னஞ்சல் சேவையை நீங்கள் பயன்படுத்தினாலும், இச்சேவையைப் பயன்படுத்தி, உங்கள் நண்பர் மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
  1. மின்னஞ்சலை தட்டச்சிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
  2. பிறகு www.spypig.com தளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி, மின்னஞ்சலின் தலைப்பு ஆகியவற்றை கொடுத்துவிடுங்கள். 
  3. அடுத்து Select your SpyPig tracking image என்பதற்கு கீழாக உள்ள ஐந்து படங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்கள் விருப்ப படங்களையும் உங்கள் கணினியிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.)
  4. பிறகு click to create my spypic என்ற படத்தின் கிளிக் செய்யவும். 
  5. இப்பொழுது உங்களுடைய tracking image உருவாகியிருக்கும். 
  6. அதை காப்பி செய்துகொண்டு, நீங்கள் தட்டச்சிட்டு வைத்திருக்கும் மின்னஞ்சலில் இறுதியில் Past செய்துவிடவும். 
  7. இப்பொழுது உங்கள் மின்னஞ்சலில் Send பட்டனை அழுத்தி மின்னஞ்சலை அனுப்பிவிடவும். 

உங்கள் மின்னஞ்சல் நண்பரை சென்றடைந்து, அதை அவர் திறந்ததும் உங்களுக்கு மின்னஞ்சல் திறக்கப்பட்டுவிட்டது என்ற தகவல்களும், எந்த ஊரிலிருந்து திறக்கப்பட்டது என்ற தகவல்கள் அனைத்தும் வந்துவிடும்.

அவசரத் தகவல், மிக முக்கியமான தகவல்கள் உள்ளடக்கிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்பதை உடனடியாக அறிந்துகொள்ள இந்த சேவை பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

விமான டிக்கெட் புக்கிங் செய்ய பயனுள்ள தளங்கள் பத்து..!

விமான டிக்கெட் பதிவு செய்ய பயனுள்ள தளங்கள் கீழே..

1. http://www.airindiaexpress.in/

air india express flight ticket booking website
air india express flight ticket booking website


2. http://www.jetairways.com/

Jet Airways flight ticket booking website
Jet Airways flight ticket booking website

3. http://www.saudiairlines.com

saudiairlines filght ticket booking website

saudiairlines filght ticket booking website
saudiairlines filght ticket booking website

4. http://www.airarabia.com

Air Arabia flight ticket booking website
Air Arabia flight ticket booking website

5. http://www.singaporeair.com

Singapore airlines flight ticket booking website
Singapore airlines flight ticket booking website

6. http://www.qatarairways.com/

Qatar Airways flight ticket booking website
Qatar Airways flight ticket booking website
7. http://www.gulfair.com

Gulf Air flight ticket booking website
Gulf Air flight ticket booking website


8. http://www.emirates.com/in/English/

Emirates flight ticket booking website
Emirates flight ticket booking website

9. http://www.malaysiaairlines.com

malaysia airlines flight ticket booking websites
malaysia airlines flight ticket booking websites



10. http://www.airindiaexpress.in

air india express flight ticket booking websites
air india express flight ticket booking websites
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

Thursday 25 April 2013

உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!

வணக்கம் நண்பர்களே..!
                            பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்தவோர் மட்டுமல்லாமல், கிட்டதட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். தற்போது பென்டிரைவ்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. லாரி டிரைவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள்வரை அனைவரிடத்திலும் இந்த பென்டிரைவ் இருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்கும்போது தொழில்நுட்பம் எத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை கண்கூடாக காணலாம்.

பல்வேறு வகைகளில் பல்வேறு தரத்தில் கிடைக்கும் பென்டிரைவ்களை பயன்படுத்துவதிலும், கையாள்வதிலும்தான் உள்ளது அதனுடைய நீண்ட ஆயுட்காலம். இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பறிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
  • உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள்.
  • (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.
  • அங்கு பென்டிரைவிற்கான டிரைவை Removable Disc (I) என்பதில் வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.
  • பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
  • அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
  • அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
சந்தேகத்திற்கு படங்களைப் பார்க்கவும்:






இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

உங்கள் கணினி இயங்கவில்லையா?

உங்கள் கணினி தொடங்குவதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா? Start பட்டனைத் திரும்ப திரும்ப அழுத்தியும் கணினியை உயிர்ப்பிக்க முடியவில்லையா? அப்படி எனில் இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.
கணினியை தொடக்கம் செய்ய முடியவில்லை எனில் கீழ்கண்ட சோதனைகளை செய்து பார்க்கலாம்.


மின்சார சோதனை:
(Power supply test)
உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள மின் ஒயர் மூலம் மின்சாரம் கணினிக்கு கிடைக்கிறதா என்பதை முதலில் சோதனை செய்துகொள்ளுங்கள்.
கணினி இணைக்கப்பட்டுள்ள power socket க்கு மின்சாரம் பாய்கிறதா என்பதை சோதித்தறியவும்.

மின்சாரம் சரியாக பாய்கிறது கணினியில் ஒரு பீப் சவுண்ட் மட்டும் கேட்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

வெவ்வேறு Bios setting-ல் வெவ்வேறு முறைகளில் செயல்படும்படும் படி அமைத்திருப்பர். பொதுவாக ஒரு பிப் சவுண்ட் மட்டும் கேட்டால் உங்கள் Computer-ல் RAM -ல் பழுது இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு நீண்ட பீப் சவுண்ட், இரண்டு குறுகிய பீப் சவுண்ட்ம் என மூன்று பீப் சவுண்ட் கேட்டால் உங்கள் Video Card -ல் பழுது இருக்கலாம்.

மேலும் சில முக்கியமான சோதனைகளை செய்து பாருங்கள்:

1. மின்சாரம் கணினிக்கு செல்கிறதா என சோதித்தறியுங்கள்.
2. Re-set, Power Button -கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என சோதியுங்கள்
3. Monitor Power Button போடப்பட்டுள்ளதா என சோதியுங்கள்
4. கணினித் திரையின் display settings ல் contrast, brightness, sharp போன்ற அமைப்புகள் சரிவரி இருக்கின்றனவா என சோதிக்கவும்.
இவையனைத்தையும் சரியாக இருக்கிறது. ஆனால் கணினி இயங்கவில்லை எனில் இந்த முறையை பின்பற்றிப் பாருங்கள்.

கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களுக்கான வயர்களை கழற்றிவிட்டு, சோதனை செய்யலாம். அதாவது கணினியில் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள powercable, மற்றும் Monitor cable ஆகியவைற்றை மட்டும் விட்டுவிட்டு,மற்ற கேபிள்களை கழற்றி கணினியை இயக்கவிட்டுப் பார்க்கலாம்.

அப்போது கணினி இயங்கினால் கழற்றப்பட்ட மற்ற சாதனங்களில் ஏதோ பழுது இருக்கிறது என யூகிக்கலாம். கழற்றப்பட்ட மற்ற சாதனங்களை ஒவ்வொன்றாக இணைத்து சோதனை செய்யும்போது எதில் பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறியலாம். இவை அனைத்தும் சரியான நிலையில் இருக்கிறது. மேலும் என்ன செய்யலாம்?

இதுவரைக்கும் நாம் பார்த்தது கணினியில் வெளிப்புறச் சோதனைகள். இனிமேல் செய்ய இருப்பது உட்புறச் சோதனைகள்: இதைச் செய்யும்போது சற்று கவனம் தேவை.

RAM சோதனை:
(Ram test)
கணினியில் உள்ள வெளிப்புற மூடியை(CPU Cover) கழற்றி எடுங்கள். உள்ளிருக்கும் RAM - கழற்றி அதிலிருக்கும் உலோகப் பகுதியை சுத்தமான துணிகொண்டு துடைத்தெடுங்கள். மேலும் தூசிகள் நீக்கிவிட்டு இருந்த இடத்தில் RAM-ஐப் பொருத்துங்கள். மீண்டும் உங்கள் கணினியை இயக்கிப் பாருங்கள். இப்போது கணினி இயங்க ஆரம்பிக்கும். பெரும்பாலான HARDWARE பிரச்னை இதுவாகத்தான் இருக்கும் Ram அதிகளவு தூசிகள் அடைத்துக்கொண்டால் கணினி செயலற்றுப் போகும்.
Ram card
Ram
VGA Card சோதனை:
(VGA CARD TEST)
மேற்கூறிய RAM சோதனையில் கணினி சரிவர இயங்காவிட்டால் இந்த சோதனையைச் செய்து பார்க்கவும். தற்போதைய கணினிகள் உள்ளமைந்த VGA Card களுடன் வருவதால் அவற்றை சோதனைச் செய்ய முதலில் உங்கள் கணினியை Start செய்யுங்கள். Boot ஆகும்போது F2 அல்லது Del பட்டனை அழுத்தி Bios Settings க்குள் செல்லுங்கள். பிறகு VGA CARD -ஐ உயிர்ப்பூட்டுங்கள். பிறகு மானிட்டர் கேபிளை கழற்றி One port VGA -வில் செருகி கம்ப்யூட்டரை Restart செய்யுங்கள்.
VGA Card computer
VGA Card
இது ஓரளவிற்கு பலனளிக்கும். புது VGA கார்ட் வாங்கும்வரை இந்த முறையை செயல்படுத்திப் பார்க்கலாம். இந்த சோதனையைச் செய்துபார்க்கும்போது கவனத்துடன் செயல்படுங்கள்.. இது அனைத்தும் அடிப்படையில் நாமே செய்துபார்க்கக் கூடிய எளிதான செயல்கள்தான்.

இவை அனைத்தையும் செய்தும் கணனி இயங்கவில்லையா அருகிலுள்ள Hardware டெக்னீஷியனை வரவழைத்து கணினியை சோதனையிட்டு, சரிபார்ப்பதுதான் சிறந்த முறை. அதைச்செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே..!

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா...!

ஒரு ஆர்வத்தில் சி.டி. யை உங்கள் கணினியில் உள்ள DVD Drive--ல் போட்டு அதை இயக்கியிருப்பீர்கள்.

இயக்கம் முடிந்த பிறகு மீண்டும் அதை வெளியே எடுக்க முனையும்பொழுதுதான் உங்களுக்கு சிக்கலே ஆரம்பிக்கும்.. நன்றாக திறந்து மூடிக்கொண்டிருந்த டிரைவ் இப்பொழுது திறக்காமல் உங்கள் பொறுமையைச் சோதிக்கும்..


dvd emergency hole


DVD Drive Tray திறக்காமல் இருப்பதற்கான காரணங்கள்:

வழக்கம்போல முழுமுதல் காரணம் தூசிகள்தான். அதனோடு வேறேதேனும் ஒட்டும்பொருட்கள், தலைமுடி, அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கும். அல்லது DVD Drive Tray கதவுப் பகுதி பிளாஸ்டிக்கால் ஆனதால் அதில் ஏதேனும் விரிசல், உடைசல் ஏற்பட்டாலும் இவ்வாறு திறக்காமல் இருக்கலாம்.

இவ்வாறான தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாவீர்கள்... இப்பிரச்னைக்கு எளிய தீர்வுகள் இருக்கின்றன.

தீர்வு 1: 

உங்கள் CD Drive -மூடியின் கீழாக அருகில் பார்த்தால் ஒரு ஊசி நுழையும் அளவிற்கு ஒரு ஓட்டை இருக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ஒரு சிலர் இதை கவனித்திருக்கமாட்டார்கள். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி)

அந்த துளையில் ஒரு ஊசியை அல்லது பேப்பர் கிளிப் (paper clip) எடுத்து இலேசாக நுழைத்தால் போதும். உடனடியாக உங்களுடைய சி.டி டிரைவின் டிரே வெளியே வந்துவிடும்.

தீர்வு 2:

உங்கள் கணினியில் மைகம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் அனைத்து டிரைவ்களும் காட்டப்படும். அதில் Devices with removable storage என்ற பிரிவின் கீழ் உங்கள் சி.டி. அடங்கிய ஐகான் (DVD Drive Icon) காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து எஜக்ட் (Eject) என்பதைக் கிளிக் செய்யவும்.

தீர்வு 3:

இந்த வழிமுறை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டிய ஒன்று. முதலில் உங்கள் கணினியில் மின்சாரம் பாய்வதை தடை செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய கணினியை shutdown செய்துவிடவும். பிறகு சி.டி. டிரைவின் டிரேவிற்கு அடியில் ஒரு பிளாட் ஸ்குரூ டிரைவை எடுத்து இலேசாக அதனடியில் செலுத்தி, DVD/CD Drive -ன் டிரேயை இலேசாக இழுக்கவும் (வேகமாக பலம்கொண்டு இழுக்கக்கூடாது). இப்பொழுது டிரே வெளியே வந்துவிடும்.

தீர்வு 4: 

இம்மூன்று வழிகளையும் பின்பற்றி DVD Drive கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறார் (Computer Doctor)கம்ப்யூட்டர் வைத்தியர் (பழுது பார்ப்பவர்). அவரிடம் சொல்லி அதனைச் சரிசெய்ய வேண்டியதுதான். ஆம் நண்பர்களே... கணினியைப் பொருத்தவரை தெரியாத செயல்களை நாம் செய்யும்பொழுது மிக கவனமுடன் செய்து பரீசித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் அதற்குரியவர்களிடம் காண்பித்து சரிசெய்வதே சிறந்த முறை.

மேற்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி DVD Tray திறக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் நான்காவது வழிமுறையான கணினி பழுது பார்ப்பவரை அழைத்துதான் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.

Saturday 13 April 2013

போதை பொருள் அடிமையானவர்களின் தோற்றம் முன்னரும் பின்னரும் : புகைப்படங்கள்


இளையோர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப்பொருள் பழக்கம் குறித்து விழிப்புணர்வை தூண்டும் வண்ணம் லண்டனைச் சேர்ந்த புகைப்படக்காரர் Roman Sakovich என்பவர் சற்று வித்தியாசமாக எண்ணியுள்ளார்.
அதாவது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் முன்னர் இருந்த முகத்தோற்றமும் பின் மாறுபட்ட முகத்தோற்றமும் எவ்வாறு காட்சியளிக்கும் என மாடல்களைக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதற்காக நுட்பமாக மேக்கப் போடப்பட்டு இருவேறு தோற்றங்களை பாதிபாதியாக காட்டியிருப்பது புகைப்படக்காரரின் தனித்திறமை என்றே கூறலாம்.

போதை பொருள் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் எவ்வகையானது என இப்படங்கள் உணர்த்துவதாக அமைகிறது.





ஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர்

ஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர்

உலகின் மிகப்பெரிய கட்டடமான DUBAI  உள்ள பூர்ஜ் கலிஃபா ஐ விட உயரமாக அதாவது சுமார் 1 கிலோமீட்டருக்கும் அதிகமான (1401 மீற்றர்) உயரமுடைய ஒரு கட்டடத்தை சவுதி அரேபியாவில் அமைக்க லண்டனைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
கிங்டம் டவர் எனப் பெயரிடப் பட்டுள்ள இச்செயற்திட்டத்தை மேற்கொள்வதற்கு 780 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் பணி நிறைவடைந்தால் கிங்டம் டவர் மேற்கு ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான கட்டடத்தை விட 4 மடங்கு பெரிதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. சவுதி அரேபியாவின் ஜெத்தாஹ் நகரில் அமையவுள்ள இக்கட்டடத்தை இலண்டனைத் தளமாகக் கொண்ட மாசே (Mace) எனும் கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிறுவனமே லண்டனில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இராட்டினமான லண்டன் ஐ (London Eye) உட்பட பல முக்கியமான கட்டுமானங்களை செய்திருந்தது.

எதிர்வரும் 2018 இற்குள் முடிவடையவுள்ள இச்செயற்திட்டம் 500 000 சதுர மீற்றர் பரப்பளவு நிலப்பரப்பில் அமைக்கப் படவுள்ளது. தற்போது உலகின் மிகப் பெரிய கட்டடமான டுபாயில் உள்ள பூர்ஜ் கலிஃபா ஐ விட 172 மீற்றர் அதிக உயரத்தில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர் உச்சியில் இருந்து பார்க்கும் போது செங்கடலின் (Red Sea) அடுத்த கரை வரை தெரியும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது. தற்போது கிங்டம் டவரினை எப்படி அமைக்கவுள்ளார்கள் என்ற திட்டம் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.

உங்கள் கருத்து இங்கே

முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?



இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
என்பதை ஒவ்வொரு
நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இணையத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில் நான் அளித்துள்ள விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click) .

உண்மையில் PTC ( Paid to Click) இணையதளம் என்பது என்ன?

PTC இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள். ஒவ்வொரு PTC தளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் விளம்பரங்களின் நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.

PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி ?

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க
PTC இணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன.இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை.மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா PTC இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது வழங்குகின்றன.

எங்கே பணம் சம்பாதிப்பது?


கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இணையத்தில் நேர்மையாக செயல்பட்டு வரும் ptc  இணையதளங்கள்