Thursday 19 September 2013

Event Photographers

புகைப்பட கலைஞர்களுக்கு புகைப்பட ரசனை உள்ளவர்களுக்கு வணக்கம் .
புகைப்படம் என்பது வெறும் ஒரு பேப்பரில் அச்சிடப்படும் படம் அல்ல. ஒரு நாட்டில் புரட்சியையே ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த சாதனம்.
செழுமை, வறுமை, அழுகை, சிரிப்பு ...ஏன்? ஒருவருடைய மனநிலையைக்கூட வெளிப்படுத்தும் வல்லமை புகைப்படத்துக்கு உண்டு.
சாதாரண கண்கள் ஒரு காட்சியை கண்டால் அது நிகழ்வு. புகைப்படக்கலை நோக்கோடு பார்த்தல் அது கவிதை.
அதனால் தான் தொழில் முறை புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் ஒவ்வொரு படமும் கவித்துவம் நிறைந்ததாக இருக்கின்றன.
பொதுவாக புகைப்படம் எடுப்பவர்கள் பல்வேறு துறைகளில் இருப்பார்கள்.
உதாரணமாக விழாக்களுக்கு படம் எடுப்பவர்கள், சுற்றுச்சூழல் படம் எடுப்பவர்கள் , தனி நபர்களை படம் எடுப்பவர்கள், தொழிற்சாலைகளில் படம் எடுப்பவர்கள் என பல துறைகளில் இருப்பார்கள்.
இதில் மிகவும் சிறப்பாகவும் சமயோசித பண்புடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பவர்கள் விழாக்களுக்கு படம் எடுப்பவர்களே.

No comments:

Post a Comment