Friday 11 January 2013

12 வருடங்களின் பின் முதன் முதலாக தலைமுடி வெட்டப்போகும் பெண்

பிறேசில் நாட்டை சேர்ந்த சிறுமி நடாஷா மோரேஸ், 12 வயதாகும் சிறுமி. இவர் பிறந்ததில் இருந்து தலைமுடி வெட்டியதே கிடையாதாம். தற்பொழுது இவரது தலைமுடி 5அடி 2 இன்ச் வரை வளர்ந்து விட்டது.
பிறந்ததுக்கு முதன் முதலாக தனது தலைமுடியை வெட்ட திட்டமிட்டுள்ளார் இந்த வினோத சிறுமி. தனது வெட்டப்பட்ட கூந்தலை £3,500 இற்கு விற்க திட்டமிட்டுள்ளாராம் இவர்.
தற்பொழுது இத் தலை முடியை பராமரிக்க நாள் ஒன்றுக்கு ஒரு முழு போத்தல் சம்பூ தேவைப்படுகிறதாம் இவருக்கு. அத்துடன் தலைமுடியை சம்பூ போட்டு கழுவ 4 மணி நேரம் பிடிக்கிறதாம்.
இவர் வீட்டில் இருக்கும் போது மின்விசிறி போடமாட்டார்களாம். மீறி போட்டால் தலைமுடி சிக்கிக்கொண்டு, சிக்கெடுக்க ஒருநாள் முழுவதும் செலவழியுமாம்.
 

No comments:

Post a Comment