Friday 23 August 2013

புகையும் பனியும் புகைப் படம் ஆகலாம்

எறியும் குப்பையில் இருந்து எழும் புகையோ, அல்லது களத்து மேட்டில் எழும் தூசியோ, மூடு பனியோ அழகான புகைப் படங்களை உங்களுக்கு அளித்திடும் உங்களுக்கு அழகினை ரசித்திடும் கண்கள் இருந்தால். அந்தப் படங்களில் வெரும் புகையோ பனியோ இருந்தால் போதாது. வேறு சிலவும் இருந்திடல் வேண்டும். இந்தப் படங்களைப் பாருங்கள். அப்போதுதான் அவை கதை சொல்லும். கண்களைக் கவரும்.



இந்தப் படத்தில், “மாடுகள் வெட்டுப் பட்டிருப்பது ஒரு குறையாகாதா?” என்று கேட்கலாம். ஆனால் அவை வெளியில் இருந்து படத்தின் உள்ளே வருவதாலும் அவை களத்து மேட்டின் கதையைப் பூர்த்தி செய்வதாலும் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாது.

இதோ இந்தப் படத்தில் ஆடுகள் கிளப்பிடும் புழுதியே படத்திற்கு உயிர் ஊட்டுகிறது,




நீங்களும் எடுத்திடலாம் இவ்வகையான படங்களை.

No comments:

Post a Comment