Friday 23 August 2013

இரவு புகைப்படம் (Night Photograph)

இரவு புகைப்படங்களுக்கு முக்காலி (Tripod) மிக மிக அவசியமானது. ஏன் என்றால் நீண்ட நேரம் புடைக்க (Expose) செய்ய வேண்டி இருக்கும். அத்தனை நேரம் அசையாமல் கருவியை பிடித்திருக்க வேண்டும். (இரவும் புகைப்படங்கள் எடுக்கும் போது கிளிக் செய்வதை விட self timer உபயோகிக்க பரிந்துரைக்கின்றார்கள். ஏனெனில் நாம் கிளிக் செய்யும் போது ஏற்படும் அசைவுகள் கூட படங்களை கெடுத்துவிடலாம் என்கின்றார்கள். டிரைபாடில் வைத்து Self Timer வைக்கும் போது மிகச்சிறந்த காட்சிகள் நமக்கு கிடைக்கும்.
சூரியன் மறைந்து அதன் வெளிச்சம் மட்டும் இருக்கும் சமயத்தில் எடுக்கும் காட்சிகள் பிரமாதப்படுத்தும். ஏனெனில் வெவ்வேறு வண்ணங்கள் சிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கீழே உள்ள படம் இரவு புகைப்படக்கலைக்கு தேவையான தொழிநுட்ப விடயங்களை நமக்கு தெளிவாக்கும். மேலும்
 
இரவின் என்னென்ன எடுக்கலாம் என்கின்ற சில வழிகாட்டுதல்கள்
  • இரவு வாழ்கை
  • கட்டிடங்கள், மண்டபங்கள்
  • நீர் நிலைகளும் அதன் பிரதிபலிப்புகளும்
  • வான வேடிக்கைகள் (இதற்கு தனியாக யாரேனும் எழுதலாமே)
  • மின்னல்கள்
  • இரவின் நரகம்..ச்ச இரவின் நகரம்
  • விழாக்கள்
  • இன்னும்..இன்னும்......
ISO :
இரவும் புகைப்படங்களுக்கு அதிக ISO பயன்படுத்தினால் படங்கள் தெளிவாக வரும்.
சென்றவாரம் மைசூரில் நடந்த தசரா திருவிழாவிற்கு சென்றிருந்த போது எடுத்த படங்கள் இவை. மூன்றும் ஒரே நேரத்தில் எடுத்தவை தான். ஆனால் வேறு வேறு Exposure. ஒவ்வொரு படத்திலும் படத்தின் ஆழம் அதிகரித்து கொண்டே போவதை காணலாம். முதல் படத்திற்கு -2 Exposure (Under Expose), அடுத்ததற்கு -.67, மூன்றாவது 0 Exposure. ISO : 400
படம் : 1
படம் : 2
படம் : 3
இரவு புகைப்படங்கள் எடுப்பது மற்ற படங்களை எடுப்பதை விட சற்று சிரமம் தான்,

No comments:

Post a Comment